திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படம் 1991ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு அவர்கள் இருவரும் எந்த படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னமும், கமலும் 'தக்லைப்' படத்தில் இணைந்திருக்கும் நிலையில் அடுத்தபடியாக ரஜினியும், மணிரத்னமும் இணையப் போவதாக சமீபத்தில் ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் நடிகை சுஹாசினி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடத்தில் அது குறித்து கேள்வி எழுப்பிய போது, ரஜினியும் மணிரத்னமும் மீண்டும் இணைவதற்காக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி வெறும் வதந்தி என்று தெரிவித்திருக்கிறார் சுஹாசினி.