2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

டாப்பில் உள்ள ஹீரோக்கள் சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிப்பது இப்போது அதிகமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் அரிதானதாக இருந்தது. அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாராஜ பாகவதர் 'தியாகராஜா டாக்கி பிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'சத்திய சீலன்' என்ற படத்தை 52 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்து அதில் அவரே நடிக்கவும் செய்தார்.
இதில் அவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தேவசேனா நடித்தார். எம்.ராமசாமி அய்யர் மன்னர் விக்ரமசிங்காக நடித்தார். பத்மாவதி பாய் ராணி வேதவல்லியாக நடித்தார். சைலன் போஸ் ஒளிப்பதிவு செய்தார், ஜானகி கவிகுஞ்சாராம் இசை அமைத்தார்.
ஜோதிபுரி என்ற கற்பனை தேசத்தின் மன்னர் திடீரென இறந்து விடுகிறார். இதனால் இவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் ராஜினாமா செய்து விடுகிறார். இதனால் 3வது இடத்தில் இருந்த அமைச்சர் மன்னராக முயற்சிக்கிறார். ஆனால் மக்களோ இறந்த மன்னரின் மகனும், படைத் தளபதியுமான சத்யசீலனே மன்னராக வேண்டும் என்கிறார்கள். இதனால் தனக்கு இடையூறாக இருக்கும் சத்யசீலனை ஒழிக்க பல சதி வேலைகளை செய்கிறார் அமைச்சர். அதை முறியடித்து சத்ய சீலன் எப்படி மன்னர் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. சத்யசீலனாக தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இந்த படத்தின் பிரதி இப்போது இல்லை. சொல்லுபாப்பா... என்ற ஒரு பாடல் மட்டுமே தற்போது படத்திற்கு அடையாளமாக இருக்கிறது.