தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ரஜினியும், ஏவிஎம் நிறுவனமும் இணைந்து பணியாற்றிய முதல் படம் 'முரட்டுக்காளை'. ரஜினியின் டாப் டென் படங்களில் இதுவும் ஒன்று. வழக்கமான ஹேர் ஸ்டைலை மாற்றி ரஜினி நடித்த படம். இந்த படத்தில் பவுர்புல்லான வில்லன் கேரக்டரில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அப்போது கதாசிரியர் பஞ்சு அருணாசனத்தின் நினைவுக்கு வந்தவர் ஜெய்சங்கர்.
100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் படங்கள் எதுவும் இன்றி வீட்டில் இருந்தார். என்றாலும் ஹீரோவாக நடித்தவர் வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்வரா என்ற தயக்கம் இருந்தது. என்றாலும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனே ஜெய்சங்கரை அழைத்திருக்கிறார். தன்னை வில்லனாக நடிக்கக் கேட்கிறார்களே...' என்கிற தயக்கம் முதலில் ஜெய்சங்கருக்கு இருந்தாலும், பஞ்சு அருணாச்சலம், ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியவர்கள் தனது நலம் விரும்பிகள் என்கிற ஒரே காரணத்திற்காக உடனே ஒப்புக் கொண்டார் ஜெய்சங்கர்.
ஹீரோ ரஜினிக்கே இது ஆச்சரியமான செய்திதான். ஜெய்சங்கர் நான் ரசித்து பார்த்த ஹீரோ. அவர் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். ஆனாலும் அவருக்குரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும் என்ற ரஜினி மூன்று நிபந்தனைகளை விதித்தார்.
படத்தின் விளம்பரங்களில் எனக்கு இணையான முக்கியத்தும் ஜெய்சங்கருக்கும் தரப்பட வேண்டும். கதைப்படி வரும் கற்பழிப்பு காட்சியை கற்பழிக்க முயற்சிப்பது போன்று மாற்றம் செய்ய வேண்டும். கிளைமாக்சில் போலீசார் வில்லனை அடித்து இழுத்து செல்வது போன்ற காட்சியை மாற்ற வேண்டும் என்றார். அப்படியே செய்யப்பட்டது.