கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்திற்கு பிறகு அடுத்து இவர் நடிகை திரிஷாவை வைத்து 'மாசாணி அம்மன்' எனும் படத்தை மூக்குத்தி அம்மன் பாணியில் உருவாக்கவுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வந்தது.
ஆனால், இந்த தகவலுக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாமல் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி, நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்குகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார் என தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு போஸ்டரில் குதிரை, அருவா என பல குறியீடுகள் இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் கதை குறித்து வரும் தகவல்கள் என்னவென்றால் மாசாணி அம்மன் கதையில் பல மாற்றங்கள் செய்து தான் இப்போது சூர்யாவின் 45வது படமாக உருவாகிறது என்கிறார்கள்.