ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மஹாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றார்கள். அதையடுத்து பாபா சித்திக்கின் நண்பரான நடிகர் சல்மான்கானையும் கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த சுக்பீர் பல்வீர் சிங்கை மும்பை போலீசார் கடந்த புதன் கிழமை கைது செய்தார்கள். அதோடு சல்மான்கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் மும்பை போலீசாருக்கு வாட்ஸ் அப்பில் வந்த மிரட்டல் செய்தியில், சல்மான்கான் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் ஐந்து கோடி ரூபாய் தர வேண்டும். லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர இதை சல்மான்கான் செய்தாக வேண்டும். இல்லை என்றால் பாபா சித்திக்கை விட சல்மான்கானின் முடிவு மோசமானதாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தற்போது குண்டு துளைக்காத நிசான் பேட்ரோல் எஸ்யூவி என்ற ரக காரை 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார் சல்மான்கான். துபாயில் இருந்து இறக்குமதி செய்துள்ள இந்த காரில் வெடிகுண்டு எச்சரிக்கை அலாரம். குண்டு துளைக்காத பக்கவாட்டு கண்ணாடிகள், ஓட்டுநரை பாதுகாக்கும் வகையிலான திரை மறைப்புகள் போன்ற நவீன அம்சங்கள் நிறைந்திருக்கிறது. தற்போது இந்த காரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு தான் வெளியில் தலைகாட்டி வருகிறார் சல்மான்கான். அதோடு அவர் நடித்து வரும் படப்பிடிப்பு மட்டுமின்றி ஹிந்தி பிக்பாஸ் அரங்குக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .