தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் 'ஒற்றைப் பனை மரம்'. சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் 40க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை பெற்றுள்ளது.
''மண்” பட இயக்குனர் புதியவன் ராசையா நடித்து இயக்கி உள்ளார். நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா இசை அமைத்துள்ளார். படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் புதியவன் ராசய்யா கூறும்போது, “இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக 'ஒற்றைப் பனை மரம்' உருவாகியுள்ளது. யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் பார்வையாளர்களை கொண்டு சேர்க்கும்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம்” என்றார்.