இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் 'ஒற்றைப் பனை மரம்'. சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் 40க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை பெற்றுள்ளது.
''மண்” பட இயக்குனர் புதியவன் ராசையா நடித்து இயக்கி உள்ளார். நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா இசை அமைத்துள்ளார். படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் புதியவன் ராசய்யா கூறும்போது, “இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக 'ஒற்றைப் பனை மரம்' உருவாகியுள்ளது. யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் பார்வையாளர்களை கொண்டு சேர்க்கும்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம்” என்றார்.