சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் 'ஒற்றைப் பனை மரம்'. சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் 40க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை பெற்றுள்ளது.
''மண்” பட இயக்குனர் புதியவன் ராசையா நடித்து இயக்கி உள்ளார். நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷயா இசை அமைத்துள்ளார். படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் புதியவன் ராசய்யா கூறும்போது, “இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக 'ஒற்றைப் பனை மரம்' உருவாகியுள்ளது. யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் பார்வையாளர்களை கொண்டு சேர்க்கும்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம்” என்றார்.