தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என அவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கே முறைகேடாக பல வசதிகளை பெற்றதாக தெரியவந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது தர்ஷன் தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவருக்கு பெங்களூரில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. அதேசமயம் பெங்களூருக்கு அல்லாமல் பெல்லாரியிலேயே உள்ள விஜயநகர இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட தர்ஷனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தர்ஷன் மீண்டும் பெல்லாரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்த ஒன்றிரண்டு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இருப்பினும் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை உடனடியாக செய்தாக வேண்டும் என்றும் அதனால் அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் அவரது தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.