ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்திய நடிகராகிவிட்டார். அது மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் தெரிந்த ஒரு நடிகரும் ஆகிவிட்டார். குறிப்பாக ஆயிரம் கோடி வசூல் படங்களை கொடுத்து வருகிறார். அதேபோல நடிகை சமந்தாவும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான். ஆனால் இத்தனை வருடங்களில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, கிர்த்தி சனோன் உள்ளிட்ட பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்த விட்டார் பிரபாஸ் ஆனால் சமந்தாவுடன் இணைந்து அவர் இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. குறிப்பாக இந்த இரண்டு தரப்பு ரசிகர்களும் கூட இந்த ஜோடியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் சமந்தாவுடன் பிரபாஸ் நடிக்காததற்கு ஒரே காரணம் இருவருக்குமான உயர பிரச்சனை என்று தான் தெலுங்கு திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. பிரபாஸ் 6.2 அடி உயரமும் சமந்தா 5.2 அடி மட்டுமே உயரம் என்பதால் படத்தில் ஜோடியாக நடிக்கும் போது இந்த வித்தியாசம் தெளிவாகவே தெரியும் என்பதால் தான் சமந்தாவுடன் நடிக்காமல் ஒதுங்கி உள்ளாராம் பிரபாஸ். ஏற்கனவே அவர் நடித்த சாஹோ திரைப்படத்தில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. இந்த உயர பிரச்சனை காரணமாகத்தான் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.