தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் மறைந்த ஏ.நாகேஸ்வரராவ். தமிழில் 'தேவதாஸ், மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை, கல்யாணப் பரிசு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். 2014ம் ஆண்டு அவர் காலமானார்.
அக்கினேனி சர்வதேச அறக்கட்டளை சார்பாக 2006ம் ஆண்டு முதல் 'ஏஎன்ஆர் தேசிய விருது' வழங்கப்பட்டு வருகிறது. தேவ் ஆனந்த், ஷபனா ஆஸ்மி, அஞ்சலி தேவி, ஜெயசுதா, வைஜெயந்தி மாலா, லதா மங்கேஷ்கர், கே பாலசந்தர், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன், குடிபூடி ஸ்ரீஹரி, எஸ்எஸ் ராஜமவுலி, ஸ்ரீதேவி, ரேகா ஆகியோர் அந்த விருதை வாங்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அந்த விருது இந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் அதை சிரஞ்சீவிக்கு வழங்க உள்ளார்.
விருதை வாங்க வருமாறு நடிகர் சிரஞ்வீயை நேரில் சந்தித்து அழைத்துள்ளார் நாகேஸ்வரராவின் மகனும் நடிகருமான நாகார்ஜூனா. “இந்த ஆண்டு எனது அப்பா ஏஎன்ஆர்-ன் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவதால் இது சிறப்பு வாய்ந்தது. ஏஎன்ஆர் விருதுகள் 2024க்காக நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரை அழைப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விருது விழாவை மறக்க முடியாத ஒன்றாக உருவாக்க வேண்டும்,” என நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.