ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியமானது கோவா சர்வதேச திரைப்பட விழா. இதன் 55வது விழா நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை பனாஜி நகரில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் இந்திய பனோரமா பிரிவில் 25 திரைப்படங்கள், 20 வணிக அம்சம் அல்லாத திரையிடப்பட உள்ளது.
அந்த 25 திரைப்படங்களில் 5 திரைப்படங்கள் முக்கியத் திரைப்படங்களாகத் தேர்வாகியுள்ளது. அந்த ஐந்தில் 'கல்கி 2898 ஏடி (தெலுங்கு), மஞ்சுமல் பாய்ஸ் (மலையாளம்), கர்கானு (குஜராத்தி), 12வது பெயில் (ஹிந்தி), ஸ்வார்கரத் (அசாமி) ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது. மற்ற 20 திரைப்படங்களில் ஒரே ஒரு தமிழ்ப் படமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' தேர்வாகி உள்ளது. இந்தத் தேர்வுகளில் மொத்தம் 384 இந்தியத் திரைப்படங்கள் கலந்து கொண்டன.
வணிக அம்சம் அல்லாத 20 திரைப்படங்களில் 'அம்மாஸ் ப்ரைடு' மற்றும் 'சிவந்த மண்' ஆகிய இரண்டு படங்கள் தேர்வாகி உள்ளது. இந்தத் தேர்வில் மொத்தம் 262 படங்கள் கலந்து கொண்டன.
இந்திய பனோரமா 2024 முதல் திரைப்படமாக ரந்தீப் ஹுடா இயக்கிய “ஸ்வதந்த்ரிய வீர் சாவர்கார்' படம் திரையிடப்பட உள்ளது.