ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019ல் வெளிவந்த படம் 'கைதி'. சிறந்த விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிதான் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தையும் இயக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
அதன் பின் விஜய் நடிப்பில் 'மாஸ்டர், லியோ' படங்களையும் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தையும் இயக்கி, தற்போது ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். 'கைதி' படம் வெளியான பின்பு அதன் இரண்டாம் பாகம் வரும் என்று அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி பேசி வந்தார்கள்.
தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அது தள்ளிக் கொண்டே போய் வருகிறது. “விரைவில் டில்லி திரும்ப வருவார்” என இன்று அப்படத்தின் ஐந்தாவது வருடத்தில் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிருந்துதான் அனைத்தும் ஆரம்பமானது. கார்த்தி சார், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு சார்” ஆகியோருக்கும் இதை நடக்க வைக்கும் 'யுனிவர்ஸுக்கும்' நன்றி,” என்றும் குறிப்பிட்டுள்ளார். 'கைதி' படத்தில் கார்த்தியின் கதாபாத்திரப் பெயர்தான் டில்லி.
எஸ்ஆர் பிரபு தயாரித்த 'மாநகரம்' படம் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமானார். 'கூலி' படத்திற்குப் பிறகு 'கைதி 2' படம் உருவாகவும் வாய்ப்புள்ளது.