தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தீபாவளிக்கு எந்தப் படங்கள் வரப்போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தீபாவளியை அடுத்து வரும் பண்டிகை நாளான பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வரப் போகிறது என்பதையும் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு சில படங்களின் பெயர்கள் இப்போதே பேச்சுக்குள் வர ஆரம்பித்துவிட்டன. அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை 2025ம் ஆண்டின் பொங்கல் வெளியீடு என எப்போதோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், நேற்று வந்த ஒரு அறிவிப்பு இப்போது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. படத்தின் தமிழக, கர்நாடகா, கேரளா உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நேற்று அறிவித்தது. அதற்கான போஸ்டரில் படத்தின் வெளியீடு குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை.
இப்படத்திற்கு முன்பாகவே அஜித் நடிக்க ஆரம்பித்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களுக்கு நடத்தினால்தான் மொத்த படப்பிடிப்பும் முடியுமாம். தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் ஸ்பெயின் நாட்டில் உள்ளாராம். அங்கேயே சென்று 'விடாமுயற்சி' படத்தின் எஞ்சிய சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளார்களாம்.
'குட் பேட் அக்லி'யின் நேற்றைய போஸ்டரில் பொங்கல் வெளியீடு குறித்த எந்தத் தகவலும் இல்லாத காரணத்தால் 'விடாமுயற்சி' படம்தான் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. எடுக்க வேண்டிய சில காட்சிகளைத் தவிர மற்ற வேலைகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளது என்கிறார்கள். விரைவில் பட வெளியீடு குறித்த அறிவிப்பும் வரலாம் என்பதே இப்போதைய அப்டேட்.