இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் 'ஆப்பிள் பெண்ணாக' கொண்டாடப்பட்டவர் பூமிகா. 'ரோஜா கூட்டம்', 'ஜில்லுனு ஒரு காதல்' என பல வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது 'பிரதர்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். பிரதர் படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்துள்ள பூமிகா தனது நேர்காணல்களில் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "நான் தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மணிரத்தினம் சார் கம்பெனியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. மணிரத்தினம் சார் படத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு யாராவது மறுப்பு சொல்வார்களா நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.
பின்னர் தான் தெரிந்தது அதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது. அப்போது நான் பல தமிழ் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். எனக்கு அது சரி என்று பட்டது. அதனால் நடிக்க மறுத்து விட்டேன்.
அந்தப் படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். நான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்ரன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு. இவ்வாறு பூமிகா கூறியிருக்கிறார்.