ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது பயோபிக் படமாக உருவாகியுள்ள 'அமரன்' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்காக சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படக்குழுவினர் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று வீர வணக்கம் செலுத்தியுள்ளார் சாய் பல்லவி. “அமரன்' படத்திற்கான புரமோஷனை ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசிய போர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். நமக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக இந்த புனிதமான கோவிலில் ஆயிரக்கணக்கான 'செங்கல் போன்ற மாத்திரைகள்' உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம்சிங் ஆகயோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன். நன்றி மற்றும் வீர வணக்கங்கள்,” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.