ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது பயோபிக் படமாக உருவாகியுள்ள 'அமரன்' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்காக சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படக்குழுவினர் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று வீர வணக்கம் செலுத்தியுள்ளார் சாய் பல்லவி. “அமரன்' படத்திற்கான புரமோஷனை ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசிய போர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். நமக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக இந்த புனிதமான கோவிலில் ஆயிரக்கணக்கான 'செங்கல் போன்ற மாத்திரைகள்' உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம்சிங் ஆகயோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன். நன்றி மற்றும் வீர வணக்கங்கள்,” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.