ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மறைந்த தெலுங்கு நடிகர் ஏ நாகேஸ்வரராவ் பெயரில் 'ஏஎன்ஆர் தேசிய விருது' கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டுக்கான விருது நடிகர் சிரஞ்சீவிக்கு நேற்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் அந்த விருதை சிரஞ்சீவிக்கு வழங்கினார்.
விழாவில் நாகேஸ்வரராவ் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அவரது வருங்கால மனைவி சோபிதா துலிபலா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அமிதாப் எக்ஸ் தளத்தில், “ஏ நாகேஸ்வரராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடும்பத்தினரும், துறையினரும் அஞ்சலி செலுத்தும் போது உணர்வும் ஏக்கமும் நிறைந்த மாலையாக அமைந்தது. அந்தப் பொழுதின் ஒரு பகுதியாக என்னை மாற்றியதற்கு மனமார்ந்த நன்றி நாகார்ஜுனா. சிரஞ்சீவி அவர்களே உங்களுக்கு என்ஆர் விருது வழங்கியதில் எனக்கு பெருமிதம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அக்கினேனி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், அக்கினேனி சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கும், என் அன்பான சகோதரர் நாகார்ஜுனாவுக்கும், எனது சினிமா பயணத்தில் எனது ஒவ்வொரு மைல்கற்களுக்கும் பங்களித்த அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்,” என சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.