சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
ராமாயணம், அவற்றின் கிளை கதைகள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. ஆனால் ராமர் பாலம் பற்றிய படங்கள் மிகவும் அரிது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த 'ராம்சேது' படம் ராமர் பாலம் கட்டப்பட்ட விதம் குறித்து கடலுக்குள் இருக்கும் குறிப்பை தேடும் கதையாக இருந்தது.
ராமாயணம் பல வடிவங்களில் திரைப்படமாகிக் கொண்டிருந்த காலத்தில் ராமர் பாலத்தை பற்றி வந்த படம் 'சேது பந்தனம்'. ராமர் பாலம் கட்டப்பட்ட விதம் குறித்து ராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதையே படமாக எடுத்திருந்தனர். சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையையும் இப்படம் விவரிக்கிறது.
பி.பி.ரங்காச்சாரி ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜி ராவ் ராமராக நடித்தார். எம்.எஸ்.மோகனாம்பாள் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடித்தார். ஆஞ்சநேயராக பார்த்தசாரதி நடித்தார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக இருந்ததாக சொல்வார்கள். ராவணனால் சீதை அடைத்து வைக்கப்பட்டிருந்த அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். பத்மநாபன் இப்படத்தை இயக்கி, தயாரித்தார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா பாடல்கள் எழுதினார்.
அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது வழக்கம். இந்தப் படத்துடன் 'ஆசை' என்ற குறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன். இக்குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் பற்றிய மேல் விபரங்களோ, திரைப்பட பிரதியோ இப்போது இல்லை.