படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

1980ல் வெளியான 'ஒரு தலை ராகம்' கதை, உருவாக்கம், பாடல், வெற்றி இவற்றில் சரித்திர சாதனை படைத்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பலர் அறியாத ஒரு விஷயம் உண்டு. இந்த படத்தின் கதையை தயார் செய்த பிறகு டி.ராஜேந்தரின் பக்கத்து ஊர்காரரான இப்ராஹிடம் சொன்னார். வெளிநாட்டில் சம்பாதித்து நல்ல வசதியுடன் இருந்த இப்ராஹிமும் அந்த கதையை சினிமாவாக தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தீவிர ரஜினி ரசிகராக இருந்த அவர் இந்த படத்தில் ரஜினியை நடிக்க வைக்க முடியுமா என்று பாருங்கள் என்றார்.
ராஜேந்தர் சென்னை வந்து பல முயற்சிகளுக்கு பிறகு ரஜினியை சந்தித்து கதை சொன்னார். கதையை கேட்ட ரஜினிகாந்த் “அண்ணே நமக்கு இந்த காதல் கதையெல்லாம் செட்டாகாது. நல்ல அடிதடி ஆக்ஷன் கதையாக கொண்டு வாங்க நடிச்சுத் தர்றேன்” என்று கூறிவிட்டார். இதனால் ரஜினிக்கு பதில் சங்கர் நடித்தார். நாயகியாக உஷாவை நடிக்க வைக்க வேண்டும் என்பதே டி.ராஜேந்தரின் ஆசை. அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த ராஜேந்தருக்கும், உஷாவுக்கும் ஒரு தலை ராகம் படத்திற்கு முன்பே சின்ன நட்பு இருந்தது. ஆனால் தயாரிப்பாளரின் தேர்வுதான் ரூபா.
சில படங்களுக்கு பிறகு 'உயிருள்ள வரை உஷா' படத்தை டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்க முடிவு செய்தபோது அதில் வரும் 'ஜெயின் ஜெயபால்' என்ற ரவுடி கேரக்டரை ரஜினிக்காக உருவாக்கினார். ஆனால் அதிலும் ரஜினி நடிக்க மறுத்து விட்டார். அதனால் அந்த கேரக்டரில் தானே நடித்தார். இப்போது அந்த படத்தை பார்த்தாலும் ஜெயின் ஜெயபால் கேரக்டரில் ரஜினி தெரிவார்.