ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பால் நயன்தாரா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருபவர் டப்பிங் கலைஞர் ரவீணா ரவி .பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகள்தான் இவர். அதுமட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலமாக நடிகையாக மாறிய இவர் அதன் பிறகு வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து ஒரு நடிகையாகவும் பாராட்டுக்களை பெற்றார். தமிழ் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் அங்குள்ள சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமார் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் ரவீணா ரவி. அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் மலையாளத்தில் நிஜமான நாய்களை வைத்து வாலாட்டி என்கிற படத்தை இயக்கியவர் தான் தேவன் ஜெயக்குமார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நாய்க்கு டப்பிங் குரல் கொடுத்தவர் ரவீணா ரவி தான். ஆனால் இது காதல் திருமணமா இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்பது பற்றி எந்த தகவலும் ரவீணா ரவி சொல்லவில்லை.