தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பால் நயன்தாரா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருபவர் டப்பிங் கலைஞர் ரவீணா ரவி .பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகள்தான் இவர். அதுமட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலமாக நடிகையாக மாறிய இவர் அதன் பிறகு வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து ஒரு நடிகையாகவும் பாராட்டுக்களை பெற்றார். தமிழ் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் அங்குள்ள சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமார் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் ரவீணா ரவி. அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் மலையாளத்தில் நிஜமான நாய்களை வைத்து வாலாட்டி என்கிற படத்தை இயக்கியவர் தான் தேவன் ஜெயக்குமார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நாய்க்கு டப்பிங் குரல் கொடுத்தவர் ரவீணா ரவி தான். ஆனால் இது காதல் திருமணமா இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்பது பற்றி எந்த தகவலும் ரவீணா ரவி சொல்லவில்லை.