ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பால் நயன்தாரா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருபவர் டப்பிங் கலைஞர் ரவீணா ரவி .பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகள்தான் இவர். அதுமட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலமாக நடிகையாக மாறிய இவர் அதன் பிறகு வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து ஒரு நடிகையாகவும் பாராட்டுக்களை பெற்றார். தமிழ் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் அங்குள்ள சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமார் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் ரவீணா ரவி. அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் மலையாளத்தில் நிஜமான நாய்களை வைத்து வாலாட்டி என்கிற படத்தை இயக்கியவர் தான் தேவன் ஜெயக்குமார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நாய்க்கு டப்பிங் குரல் கொடுத்தவர் ரவீணா ரவி தான். ஆனால் இது காதல் திருமணமா இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்பது பற்றி எந்த தகவலும் ரவீணா ரவி சொல்லவில்லை.