துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
இந்தியத் திரையுலகத்தில் 1000 கோடி வசூலை ஆரம்பித்து வைத்த தென்னிந்திய படம் 'பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளிவந்த படம் சுமார் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.
அப்படத்திற்குப் பிறகு வெளிவந்த 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களும் 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தைத் தியேட்டர்களில் வந்து பார்த்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதில் பாதி தான் என படத்தின் தயாரிப்பாளரான ஷோபு எர்கட்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“பாகுபலி 2' படத்திற்காக 10 கோடிக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதற்கான டிக்கெட் கட்டணம் 125 ரூபாய்தான். ஆனால், 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்களுக்கு அதில் 50 சதவீத அளவுதான் மக்கள் தியேட்டர்களுக்கு வந்தார்கள். இனி வரும் படங்கள் 'பாகுபலி 2' படத்தின் வசூலை நெருங்கலாம். தற்போது டிக்கெட் கட்டணம் ரூ 300 வரை இருக்கிறது. அதிகம் பேர் பார்த்த படம் என்பதில் 'ஷோலே' படத்திற்குப் பிறகு 'பாகுபலி 2' படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படத்திற்கு 13 கோடி டிக்கெட்டுகள் விற்கப்பட்டன,” என்று தெரிவித்துள்ளார்.