குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

ஷோபா தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்த படம் 'சாமந்திப்பூ'. கே.எஸ்.மாதங்கன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அவருடன் சிவகுமார் நடித்திருந்தார். 80 சதவிகிதம் படம் முடிந்திருந்த நிலையில்தான் ஷோபா தற்கொலை செய்து கொண்டார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து நின்றார். படத்தை வெளியிட முடியாது, பண்ணிய செலவெல்லாம் வீண் என்று அவர் கவலைபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு உதவிக்கு வந்தார் எடிட்டர் மோகன் (ஜெயம் ரவியின் தந்தை).
ஷோபாவை போன்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவரை லாங் ஷாட்டிலும், முதுகு புறமாகவும் காட்டி படத்தை முடித்தார். அதோடு கதைப்படி ஷோபா தன் காதலர் சிவகுமாருடன் இணைய வேண்டும். ஆனால் அவர் காதல் நிறைவேறாத சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கதையை மாற்றி ஷோபா மரணமடைந்த பிறகு எடுக்கப்பட்ட அவரது நிஜமான இறுதி ஊர்வல காட்சியை படத்தில் இணைத்து வெளியிட்டார்கள். 'இத்திரைப் படத்தின் இறுதிக் காட்சிகளில் நடிகை ஷோபாவின் இறுதி ஊர்வலம் காட்டப்படும்' என்று விளம்பரமும் செய்தார்கள்.