ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் வைரலானது. இதேபோல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீ லீலாவை அணுகினர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் பாலிவுட் நடிகைகளான த்ரிப்தி டிகிரி, ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஆனால், இவர்கள் பெரும் தொகை சம்பளமாக கேட்பதால் தற்போது இந்த முயற்சியிலிருந்து வெளியேறினர் படக்குழு.
இப்போது மீண்டும் ஸ்ரீலீலாவை அணுகி இந்த பாடலுக்கு நடனம் ஆட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இன்னும் இந்த ஒரு பாடல் காட்சி ஒன்றும் மட்டும் தான் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.