ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த இரண்டு படங்களிலுமே ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பணியாற்றி இருக்கிறார். இந்த படங்கள் குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு லொகேஷன் மட்டுமின்றி சீதோஷ்னம் காரணமாக மாதக்கணக்கில் படப்பிடிப்பை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், விடாமுயற்சி படத்தை பொருத்தவரை அஜித்தை புதிய வடிவில் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதையிலும் ஆக்ஷனிலும் எந்தவித காம்பிரமைசும் செய்யாமல் வேலை வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிஜமாலுமே விபத்து ஏற்பட்ட போதும், அந்த விபத்தையும் ஆக்ஷன் காட்சியாக மாற்றி இருக்கிறோம். அதேபோல் குட் பேட் அக்லி படத்தை எடுத்துக் கொண்டால், அஜித்தின் கேரியரில் ஒரு அதிரடியாக கமர்சியல் படமாக இருக்கும். பில்லா படத்திற்கு பிறகு ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்த படத்தில் அஜித்தை பார்க்கலாம். விடாமுயற்சியை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.