2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த இரண்டு படங்களிலுமே ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பணியாற்றி இருக்கிறார். இந்த படங்கள் குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு லொகேஷன் மட்டுமின்றி சீதோஷ்னம் காரணமாக மாதக்கணக்கில் படப்பிடிப்பை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், விடாமுயற்சி படத்தை பொருத்தவரை அஜித்தை புதிய வடிவில் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கதையிலும் ஆக்ஷனிலும் எந்தவித காம்பிரமைசும் செய்யாமல் வேலை வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நிஜமாலுமே விபத்து ஏற்பட்ட போதும், அந்த விபத்தையும் ஆக்ஷன் காட்சியாக மாற்றி இருக்கிறோம். அதேபோல் குட் பேட் அக்லி படத்தை எடுத்துக் கொண்டால், அஜித்தின் கேரியரில் ஒரு அதிரடியாக கமர்சியல் படமாக இருக்கும். பில்லா படத்திற்கு பிறகு ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்த படத்தில் அஜித்தை பார்க்கலாம். விடாமுயற்சியை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.