தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2013ம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' என்ற வெற்றி படத்தை தந்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே, நீண்ட இடைவேளைக்கு பின்னர், 2023ம் ஆண்டு 'ராவணன் கோட்டம்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதில், “மதயானைக் கூட்டம் திரைப்படம் இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன். பச்சை துரோகி... கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டிருக்கிறான். இதைக் கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரம் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை” எனக் கூறியுள்ளார்.
விக்ரம் சுகுமாரனின் இப்பதிவு பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் குறிப்பிடும் நடிகர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்லாமல், அந்த பதிவை நீக்கினார். ஆனாலும் அந்த நடிகர் யார் என நெட்டிசன்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.