பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. இப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகி பான் இந்தியா படமாக அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 99 கோடியே 22 லட்ச ரூபாயில் இன்னும் தர வேண்டிய 55 கோடியைத் திருப்பி வழங்காத காரணத்தால் 'கங்குவா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அது மட்டுமல்ல 'தங்கலான்' படத்தை ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் 18 கோடியைத் தந்துவிட்டார்கள். எனவே, 'தங்கலான்' படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மீதமுள்ள தொகையை நாளை வழங்குகிறோம் எனக் கூறினார். இதையடுத்து நாளை வழக்கை தள்ளி வைத்துள்ளார் நீதிபதி. நாளை மதியத்திற்குள் பணம் வழங்கப்பட்டுவிட்டால் 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டி வரும்.