ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அந்தக் காலத்தில் படத்தில் நாயகியாக நடிப்பவர்களுக்கு நடனம் ஆடத் தெரிய வேண்டும், பாடத் தெரிய வேண்டும். பிற்காலத்தில் நடிக்க தெரிய வேண்டியதுமில்லை என்று மாறியது வேற கதை. நாயகிகள் ஒரு புறம் நடித்தாலும் நடனத்திற்கென்றே சில நடிகைகள் இருந்தார்கள். அதாவது கவர்ச்சி நடனத்திற்கு, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா இப்படியான நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்தார்கள். இப்போது நாயகிகளே கவர்ச்சியாக நடனம் ஆடுவதால் கவர்ச்சி நடன நடிகைகள் என்று பெரிதாக யாரும் இல்லை. ரிஷா, மஸ்காரா அஸ்மிதா என ஒரு சிலர் சிறிய படங்களில் ஆடுகிறார்கள்.
இதற்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலாக நடன நடிகையாக இருந்தவர் குமாரி கமலா. ஆனால் இவர் பாரம்பரிய, பரதநாட்டிய நடன நடிகை. மயிலாடுதுறையில் பிறந்த கமலா, 3 வயதில் இருந்தே நடனம் கற்க ஆரம்பித்தார். கதக், பரதநாட்டியம், மேற்கத்திய நடனங்களை முறைப்படி குருமார்களிடம் கற்றார். மேடைகளில் ஆடிவந்த இவர், குமாரி கமலா என்ற பெயருடன் திரைப்படங்களில் ஆடத் தொடங்கினார்.
1938ம் ஆண்டு 'சேவாதனம்' படத்தில் ஆடினார். 1944ல் 'ஜகதலப்பிரதாபன்' படத்தில் ஆடிய பாம்பு நடனம். 1947ல் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்ற பாடலை பாடி இரட்டை வேடத்தில் ஆடியது, 'பராசக்தி' படத்தில் 'ஓ ரசிக்கும் சீமானே' போன்ற பாடல்கள் அவரது சாதனைகளாக அமைந்தது. சுமார் 50 படங்களில் நடனம் மட்டும் ஆடியுள்ளார்.
அதோடு ஸ்ரீவள்ளி, பாலயோகினி, ஜகதலப்பிரதாபன், கொஞ்சும் சலங்கை, காத்தவராயன், பக்த மீரா, நாம் இருவர், வீரக்கனல், வேதாள உலகம், குல தெய்வம், பாத்திபன் கனவு, சிவகங்கை சீமை , சிவகாமி, பராசக்தி, பாவை விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார்.