துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. உலகமெங்கும் பத்தாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சூர்யா அளித்த ஒரு பேட்டியில், ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை கனவாகவே இருந்து வருகிறது. அது விரைவில் நனவாகும் என்று எதிர்பார்க்கிறேன். அதேசமயம் அப்படி நாங்கள் இணைந்து நடிக்கும் பட வாய்ப்பு என்பது தானாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எந்த இயக்குனரிடத்திலும் எங்களுக்கேற்ற கதையை உருவாக்குங்கள் என்று நானாக கூற மாட்டேன் என்று கூறியுள்ளார் சூர்யா. மேலும் திருமணத்திற்கு முன்பு சூர்யாவும், ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.