தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாக உள்ளது.
இதனிடையே, இப்படத்தை வெளியிடத் தடை கோரி ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. தங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையான 55 கோடி ரூபாய் பணத்தை ஆகஸ்ட் மாதம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் தரவில்லை. அதைத் தராமல் 'கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தரப்பில் இன்றைக்குள் அந்தத் தொகையைத் தந்துவிடுவதாக உத்தரவாதம் தரப்பட்டது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அந்தத் தொகையை செலுத்தி விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
எனவே, படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை.
இதனிடையே கங்குவா படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்று கிடைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.