ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம் 'நேசிப்பாயா'. இதனை ஆகாஷ் மனைவி, சினேகாவின் தந்தை பிரிட்டோ தயாரிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்குகிறார், யுவன் இசை அமைக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் மூலம் முன்னணி பாலிவுட் நடிகையான கல்கி கோச்லின் தமிழுக்கு வருகிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது “நேசிப்பாயா தலைப்புக்கு ஏற்ற மாதிரியே காதல் கதை. 30 சதவிகித கதை சென்னையிலும், 70 சதவிகித கதை போர்ச்சுகல் நாட்டிலும் நடக்கிறது. படத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும். இந்த கேரக்டரை எழுதும்போதே கல்கி கோச்லினை மனதில் வைத்துதான் எழுதினேன். காரணம் அவர் தமிழை ஒரு ஸ்டைலாக பேசுவார், ஆங்கில அறிவும் இருக்கிறது.
ஆனால் அவரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அவர் நயன்தாராவுக்கு நல்ல தோழி, இதனால் அவர் மூலம் தொடர்பு கொண்டு கதை சொன்னேன். பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் கேரக்டர்தான் படத்தின் திருப்பமாக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு அவரை இனி அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம்” என்றார்.