ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த 2012ம் ஆண்டு ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மும்பை நடிகையான இவருக்கு அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு, ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வந்தவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் 69வது படம், சூர்யாவின் 44 வது படம் மற்றும் ஹிந்தியில் சாகித் கபூருடன் நடிக்கும் படம் என ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடிக்கிறேன். என்றாலும் பல சமயங்களில் அந்த படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது. ஆனால் படங்களின் தோல்வியை பார்த்து ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் எனது கதாபாத்திரத்தில் 100% நடிப்பை வெளிப்படுத்துகிறேன். அதன் வெளிப்பாடாகத்தான் நடித்த படங்கள் தோல்வி அடைந்தபோதும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து இயக்குனர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். இப்போதும் என் கைவசம் ஐந்து மெகா படங்கள் இருப்பதற்கு காரணமே என் திறமை மீது இயக்குனர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்று கூறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.