ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்' ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். அவர் இயக்கிய கடைசி இரண்டு படங்களுக்காக, முதலில் இயக்கிய இரண்டு படங்களை விடவும், கை நிறைய சம்பளமாக வாங்கினார். அந்தப் பணத்தைத் திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்தார்.
தனது உதவியாளரான சிவபாலன் முத்துக்குமாரை இயக்குனராக அறிமுகப்படுத்தி, தனது நண்பரான கவினை நாயகனாக்கி 'பிளடி பெக்கர்' படத்தைத் தயாரித்தார். படம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் நெல்சன். ஆனால், தீபாவளி போட்டியில் வெளிவந்த 'அமரன்' படத்துடன் போட்டி போட முடியாமல், படமும் மிகச் சுமாராக இருந்ததால் தோல்வியைத் தழுவியது.
நெல்சனை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தன்னை நம்பி படத்தை வாங்கிய அவர்களுக்கு நஷ்டத் தொகை தந்து சரிக்கட்ட நெல்சன் முடிவெடுத்திருக்கிறாராம். ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இப்படி நஷ்டத்தைத் திருப்பித் தந்திருக்கிறார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் படம் நஷ்டம் என்றாலும், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகிய வருமானம் மூலம் தயாரிப்பாளரான நெல்சனுக்கு எந்த நஷ்டமும் இல்லையாம். தனது அடுத்த தயாரிப்பை மிகவும் கவனமுடன் செய்வாரா நெல்சன், அல்லது 'ஜெயிலர் 2' இயக்கும் வேலை போதும், என அந்தப் பக்கம் போய்விடுவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.