சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர்' ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். அவர் இயக்கிய கடைசி இரண்டு படங்களுக்காக, முதலில் இயக்கிய இரண்டு படங்களை விடவும், கை நிறைய சம்பளமாக வாங்கினார். அந்தப் பணத்தைத் திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்தார்.
தனது உதவியாளரான சிவபாலன் முத்துக்குமாரை இயக்குனராக அறிமுகப்படுத்தி, தனது நண்பரான கவினை நாயகனாக்கி 'பிளடி பெக்கர்' படத்தைத் தயாரித்தார். படம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் நெல்சன். ஆனால், தீபாவளி போட்டியில் வெளிவந்த 'அமரன்' படத்துடன் போட்டி போட முடியாமல், படமும் மிகச் சுமாராக இருந்ததால் தோல்வியைத் தழுவியது.
நெல்சனை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தன்னை நம்பி படத்தை வாங்கிய அவர்களுக்கு நஷ்டத் தொகை தந்து சரிக்கட்ட நெல்சன் முடிவெடுத்திருக்கிறாராம். ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இப்படி நஷ்டத்தைத் திருப்பித் தந்திருக்கிறார்கள்.
தியேட்டர் வெளியீட்டில் படம் நஷ்டம் என்றாலும், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகிய வருமானம் மூலம் தயாரிப்பாளரான நெல்சனுக்கு எந்த நஷ்டமும் இல்லையாம். தனது அடுத்த தயாரிப்பை மிகவும் கவனமுடன் செய்வாரா நெல்சன், அல்லது 'ஜெயிலர் 2' இயக்கும் வேலை போதும், என அந்தப் பக்கம் போய்விடுவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.