வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
‛இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். தற்போது ஹிந்தியில் ‛தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். நாளை(நவ., 15) இந்தப்படம் வெளியாகிறது. இதுதொடர்பான புரொமோஷனில் இவர் ஈடுபட்டார். அதன் ஒருபகுதியாக தன் வாழ்வில் வந்த காதல் தோல்வி பற்றியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛பொதுவாகவே நான் உணர்ச்சிவசப்படுபவள். என் வாழ்விலும் காதல் வந்தது, ஆனால் அது தோல்வி அடைந்துவிட்டது. அந்த வேதனையில் மன அழுத்தத்திற்கு ஆளானேன். பின்னர் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வலுவானேன். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சினிமா உதவியால் அதிலிருந்து மீண்டு வந்தேன்'' என தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.