தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜயகாந்தை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய படம் 'தூரத்து இடி முழுக்கம்'. அதற்கு முன் அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் அவருக்கு முதல் படம் போன்ற அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தை கே.விஜயன் இயக்கி இருந்தார். மலையாளத்தில் வெளியான 'செம்மீன்' படத்தின் சாயலில் இந்த படம் உருவாகி இருந்தது.
பானைகள் செய்யும் குயவர் குல பெண்ணான செல்லி, மீனவ குல இளைஞரான பொன்னனை காதலிப்பார். அந்த காதலில் பல பிரச்னைகள். ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்கப்போன பொன்னனை காணவில்லை. அவன் கரை திரும்பவில்லை. இதனால் செல்லிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது. கணவன் மனைவியை சந்தேகம் கொண்டு அடித்து கொடுமைப்படுத்துகிறான்.
இவர்கள் வாழ்க்கைக்குள் ஒரு மந்திரவாதி நுழைந்து செல்லியை அடைய நினைக்கிறான். நிர்கதியற்ற செல்லி ஒரு கையில் அகல் விளக்கையும், மறு கையில் சங்கையும் வைத்துக் கொண்டு இயற்கையை நோக்கி வேண்டுகிறார். எங்கோ தூரத்தில் கேட்கும் இடியோசை அவள் கேட்டதை செய்யும், அவள் கல்லாக அங்கேயே நின்று விடுவாள். இப்படியான கதை இது.
இந்த படத்தில் நடித்த பூர்ணிமா அதன்பிறகு பெரிதாக நடிக்கவில்லை. இந்த படத்தில் முதன் முறையாக லைவ் சவுண்ட் பயன்படுத்தப்பட்டது. படத்தின் கதை முழுக்க கடற்கரையை ஒட்டி நடப்பதால் அலையின் ஓசையே படத்தின் பின்னணியாக பயன்படுத்தப்பட்டது. இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி கடல் அலை ஓசையை அப்படியே பதிவு செய்து அதையே பின்னணி இசையாக அமைத்தார். இந்த படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டது.