சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். ரசிகர்களின் வரவேற்பை பெற்று 3வது வாரத்தை கடந்து ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. அதே சமயம் இந்த அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போன்று காட்சிகள் இருப்பதாக சொல்லி சமீபத்தில் சில இஸ்லாமிய அமைப்புகள் அமரன் படம் ஓடிய தியேட்டர்களும் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் அமரன் படம் ஓடிக்கொண்டிருந்த போது அந்த தியேட்டர் வாசலில் யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளார்கள். இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகிறார்கள்.