இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 4 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு பல்கலைகழக நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைகழக சேர்மன் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். செகரட்டரி ஏ.ரவிகுமார், துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் விஞ்ஞானியும், இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவருமான ஜி.ஏ.சீனிவாச மூர்த்தி, நடிகர் அர்ஜுன், இயக்குனர் பி.வாசு ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.