இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னையில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி ஆண்டுதோறும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் சார்பில் மெய்நிகர் தொழில்நுட்பம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கியது. 2022ம் ஆண்டு வெளிவந்த “லீ மஸ்க்'' என்ற படத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய்நிகர் தொழில்நுட்பத்தால் 37 நிமிடம் படம் பார்த்தவர்கள் 10 நிமிடம் படமா? என கேட்டனர். அது புதிய தொழில்நுடபம் என்பதால் அனைவரும் ரசித்தனர்.
மைக்ரோசாப்ட், ஆப்பிள், இன்டெல் தொழில்நுட்பங்கள் போல ஏன் இந்தியாவில் இருந்து ஒரு தொழில்நுட்பம் உருவாகக்கூடாது? என்று யோசித்தது உண்டு. இந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் அதிகம் பேர் பணிபுரிகிறார்கள். ஏன் அடுத்த ஆப்பிள் இந்தியாவில் இருந்து உருவாகக்கூடாது. இவையெல்லாம் நடப்பதற்கு அரசு உதவ வேண்டும். பெரிய, புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.