பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

சென்னையில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி ஆண்டுதோறும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் சார்பில் மெய்நிகர் தொழில்நுட்பம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கியது. 2022ம் ஆண்டு வெளிவந்த “லீ மஸ்க்'' என்ற படத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய்நிகர் தொழில்நுட்பத்தால் 37 நிமிடம் படம் பார்த்தவர்கள் 10 நிமிடம் படமா? என கேட்டனர். அது புதிய தொழில்நுடபம் என்பதால் அனைவரும் ரசித்தனர்.
மைக்ரோசாப்ட், ஆப்பிள், இன்டெல் தொழில்நுட்பங்கள் போல ஏன் இந்தியாவில் இருந்து ஒரு தொழில்நுட்பம் உருவாகக்கூடாது? என்று யோசித்தது உண்டு. இந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் அதிகம் பேர் பணிபுரிகிறார்கள். ஏன் அடுத்த ஆப்பிள் இந்தியாவில் இருந்து உருவாகக்கூடாது. இவையெல்லாம் நடப்பதற்கு அரசு உதவ வேண்டும். பெரிய, புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.