சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு- 2 என்ற இரண்டு படங்களை இயக்கிய சுந்தர். சி அடுத்து அப்படத்தின் மூன்றாவது பாகத்தையும் இயக்கப் போகிறார். இது குறித்த ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனமும் இந்த கலகலப்பு-3 படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகிறது. 2025ம் ஆண்டில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த தொழிலதிபர் கண்ணன் ரவி ஏற்கனவே தமிழில் சாந்தனு நடித்த 'ராவணக் கோட்டம்' என்ற படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.