ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியன் பனோரமா என் அழைக்கப்பட்டும் சர்வதேச திரைப்பட விழா வருகிற 28ம் தேதி கோவாவில் தொடங்குகிறது. இந்த விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடத் தேர்வாகி உள்ளது. தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படமும் இதுதான். இந்த நிலையில் மாதவன் நடித்து இன்னும் வெளிவராத 'ஹிஸாப் பராபர்' என்ற ஹிந்தி படம் வருகிற 26ம் தேதி சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இப்படம் ஒரு கார்ப்பரேட் வங்கி ஒன்றின் மிகப்பெரிய மோசடி ஒன்றை ஒரு சாதாரண மனிதன் அம்பலப்படுத்துவது மாதிரியான கதை. இப்படத்தில் சாதாரண மனிதராக டிக்கெட் கலெக்டர் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். தனது வங்கி கணக்கில் உள்ள குளறுபடியை கண்டுபிடிக்கும் மாதவன் அதை தொடரும்போது அதில் பெரிய மோசடி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது எப்படி நிரூபிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. இதில் கார்பரேட் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். அஸ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.பி. சினிகார்ப் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து மாதவன் கூறும்போது, “இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்து விடாது என்பதையும் புரிந்து கொள்ள வைக்கும் படம். தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் இந்தப் படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.