ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் மண்டேலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். அதன்பிறகு இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மாவீரன் படம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றது.
மாவீரன் படத்திற்கு பிறகு அஸ்வின் ஹிந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆன கரண் ஜோஹர் தயாரிக்கின்றார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மடோன் அஸ்வின் அடுத்து நடிகர் விக்ரமை வைத்து தமிழில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதுதவிர பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பட வாய்ப்பும் வந்துள்ளது. இவற்றில் யாருடைய இயக்கத்தில் விக்ரம் முதலில் நடிப்பார் என இனிமேல் தெரியவரும்.