ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோமாளி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் என்ற மல்டி ஸ்டார் படமும் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தன. இதையடுத்து அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இதைத்தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்திலும் நடிக்க போகிறார் ஜெயம் ரவி.
இப்படியான நிலையில், தனது படங்களின் தொடர் தோல்வி காரணமாக அடுத்து சுதா கெங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய சுதா, அவர் நடிக்க மறுத்ததை அடுத்து மலையாள நடிகர் நிவின் பாலி இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.