ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை நயன்தாரா சமீபத்தில் ‛நானும் ரெளடி தான்' படத்தின் காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்காக தனுஷை விமர்சித்து, நயன்தாரா கடிதம் ஒன்றை காட்டமாக மூன்று பக்கம் எழுதி வெளியிட்டார். இதற்கு நடிகை பார்வதி முதல் நபராக ஆதரவு தெரிவித்திருந்தார் .
தற்போது நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன் என்று பார்வதி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி, "சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அது தொடர்பாக ஆதரவளிக்கவும் எனக்கு நீண்ட நேரம் தேவையில்லை. நயன்தாராவின் பதிவைப் பார்த்த உடனே அதனை பகிர வேண்டும் என தோன்றியது பகிர்ந்தேன். சுயமாக வளர்ந்தவர் நயன்தாரா. அவருடைய சினிமா வாழ்க்கையை அவரே உருவாக்கி கொண்ட லேடி சூப்பர் ஸ்டாரே இப்படியான ஒரு பகிரங்கமான கடிதத்தை காரணமில்லாமல் எழுத வாய்ப்பில்லை. அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
அவர் எதிர்கொண்ட அனுபவங்களை மூன்று பக்கங்களாக எழுதியுள்ளார். அதனால் தான் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் நம்மை போல மற்றவரைக் காண்போம். நான் அவரை ஆதரித்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஏனென்றால் நானும் இப்படியான ஓர் அனுபவத்தை கடந்தே வந்துள்ளேன். பல்வேறு நெருக்கடிகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டு தான் நயன்தாரா இந்த இடத்தை அடைந்துள்ளார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நயன்தாராவுக்கு ஆதரவாக பேசுவேன். ஆதரவு கிடைக்காமல் தவிப்பது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் யோசித்துப்பார்த்தால் ஆதரவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், குறிப்பாக அவர்கள் பெண்களாக இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்காக நான் உடன் நிற்பேன்” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.