சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் விக்ரவாண்டியில் தான் மாநாடு நடத்துவதற்கு தங்களது விளைநிலங்களை கொடுத்து உதவிய அனைத்து விவசாயிகளையும் நேற்று சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய். அதோடு அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தும் உபசரித்து இருக்கிறார். மேலும், மாநாடு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளையும் இந்த நிகழ்ச்சியின்போது அழைத்து உபசரித்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய்.