இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் சென்னை புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆனால், பின்னணி இசையை அவர் அமைக்கவில்லை. அவருக்குப் பதிலாக வேறு சில இசையமைப்பாளர்கள் அமைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதுவரையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியான சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசினார்.
“ரவி சார், நான் சரியான நேரத்தில் பாடல்களைத் தரவில்லை, பின்னணி இசையைத் தரவில்லை என என் மீது குற்றம் சுமத்தினீர்கள். நீங்கள் என் மீது அன்பு செலுத்துபவர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு குற்றச்சாட்டுக்களும் இருக்கும். ஆனால், என் மீதான அன்பை விட உங்கள் குற்றச்சாட்டுக்கள்தான் அதிகமாக உள்ளது. “தவறான நேரம், நான் லேட்' என நீங்கள் கூறுகிறீர்கள். நான் என்ன செய்ய முடியும். இப்போது கூட 25 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால், குறிப்பிட்ட சமயத்தில்தான் நான் கேமரா என்ட்ரி தர வேண்டும் என என்னை அனுமதிக்கவில்லை.
மேடை மீது இவற்றை டிஸ்கஸ் செய்யத் தேவையில்லை. நான் மேடையில் பேசினால் அது என்னைத்தான் தாக்கும். இருந்தாலும் நான் ஓபனாக இருக்க விரும்புகிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.
புஷ்பா 2 பின்னணி இசை சர்ச்சையால் தேவி ஸ்ரீ பிரசாத் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் நேற்று அவர் மேடையில் வெளிப்படையாகப் பேசியிருப்பதும் இப்போது சர்ச்சையாகி உள்ளது.