தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொதுவாக கே.பாலச்சந்தர் நகர்புறத்து நடுத்தர மக்களையே கதை மாந்தர்களாக கொண்டு படம் எடுப்பார் என்ற பொதுவான கருத்து இருந்த காலத்தில் அவர் இயக்கிய கிராமத்து படம்தான் 'எங்க ஊரு கண்ணகி'. இதே படம் தெலுங்கில் 'தோலி கோடி கோசிந்தி' என்ற பெயரிலும் தயாரானது. பார்வை குறைபாடுள்ள ஒரு கிராமத்து பெண். அங்குள்ள வில்லன்களை எதிர்த்து போராடும் கதை.
பார்வையற்ற பெண்ணாக சரிதா நடித்தார், போலீஸ் கான்ஸ்டபிளாக சரத்பாபு நடித்தார். இவர்கள் தவிர சீமா, மாதவி, ஜீவா உள்பட பலர் நடித்திருந்தார்கள். முக்கிய நடிகர்கள் தவிர தமிழ், தெலுங்கிற்கு தனித்தனி நடிகர்கள் நடித்திருந்தார்கள். முழு படமும் ஆந்திராவில் உள்ள பட்டிசீமா வீரபத்தா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படமானது. இதனால் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வாசனை வீசியது. வில்லன் மீது நாயை ஏவி விடுவது, சரிதா, சீமா, மாதவி ஆகியோரின் குளியல் காட்சிகள் போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தமிழில் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் தெலுங்கில் வெற்றி பெற்றதோடு சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த பாடலாசிரியர் என 1981ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது.