பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய பிறகு அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வரும் விஜய், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமான இன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க நீதித்துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்து இருக்கிறார்.