பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் காரணமாக பல முக்கிய ஊர்களுக்கு சென்று படக்குழு புரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இந்த புஷ்பா-2 படத்தின் புரமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ஒரு முறை நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல சென்றேன். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் அவரிடத்தில் எப்படி கதை சொல்லப் போகிறேன் என்று தடுமாறினேன். ஆனால் அவரோ, மிக அழகாக தமிழ் பேசினார். அப்போதுதான் இவர் நேரடியாக தமிழ் படத்திலேயே நடிக்கலாம் என்று தோன்றியது.
அதேபோல் பாட்னாவில் அவருக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. அதனால் இனி வரும் காலங்களில் தெலுங்கில் நடிப்பது போன்று தமிழ், ஹிந்தியிலும் அவர் நேரடி படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று அல்லு அர்ஜுன் இடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார் நெல்சன். அதைக் கேட்ட அவர் அதைத்தான் ஏற்றுக் கொள்வது போன்று தலை அசைத்தார்.
அதையடுத்து, அல்லு அர்ஜுனை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்? என்று நெல்சனிடத்தில் தொகுப்பாளர்கள் கேட்டபோது, இதற்கு பதில் அல்லு அர்ஜுன் சார்தான் சொல்லணும் என்று நெல்சன் சொல்ல, அதைக்கேட்ட அல்லு அர்ஜுனோ, நான் ஓகே என்பது போன்று கட்டை விரலை காண்பித்து அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொன்னார்.