ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் காரணமாக பல முக்கிய ஊர்களுக்கு சென்று படக்குழு புரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இந்த புஷ்பா-2 படத்தின் புரமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ஒரு முறை நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல சென்றேன். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் அவரிடத்தில் எப்படி கதை சொல்லப் போகிறேன் என்று தடுமாறினேன். ஆனால் அவரோ, மிக அழகாக தமிழ் பேசினார். அப்போதுதான் இவர் நேரடியாக தமிழ் படத்திலேயே நடிக்கலாம் என்று தோன்றியது.
அதேபோல் பாட்னாவில் அவருக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. அதனால் இனி வரும் காலங்களில் தெலுங்கில் நடிப்பது போன்று தமிழ், ஹிந்தியிலும் அவர் நேரடி படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று அல்லு அர்ஜுன் இடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார் நெல்சன். அதைக் கேட்ட அவர் அதைத்தான் ஏற்றுக் கொள்வது போன்று தலை அசைத்தார்.
அதையடுத்து, அல்லு அர்ஜுனை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்? என்று நெல்சனிடத்தில் தொகுப்பாளர்கள் கேட்டபோது, இதற்கு பதில் அல்லு அர்ஜுன் சார்தான் சொல்லணும் என்று நெல்சன் சொல்ல, அதைக்கேட்ட அல்லு அர்ஜுனோ, நான் ஓகே என்பது போன்று கட்டை விரலை காண்பித்து அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொன்னார்.