'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் காரணமாக பல முக்கிய ஊர்களுக்கு சென்று படக்குழு புரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இந்த புஷ்பா-2 படத்தின் புரமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ஒரு முறை நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல சென்றேன். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் அவரிடத்தில் எப்படி கதை சொல்லப் போகிறேன் என்று தடுமாறினேன். ஆனால் அவரோ, மிக அழகாக தமிழ் பேசினார். அப்போதுதான் இவர் நேரடியாக தமிழ் படத்திலேயே நடிக்கலாம் என்று தோன்றியது.
அதேபோல் பாட்னாவில் அவருக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. அதனால் இனி வரும் காலங்களில் தெலுங்கில் நடிப்பது போன்று தமிழ், ஹிந்தியிலும் அவர் நேரடி படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று அல்லு அர்ஜுன் இடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார் நெல்சன். அதைக் கேட்ட அவர் அதைத்தான் ஏற்றுக் கொள்வது போன்று தலை அசைத்தார்.
அதையடுத்து, அல்லு அர்ஜுனை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்? என்று நெல்சனிடத்தில் தொகுப்பாளர்கள் கேட்டபோது, இதற்கு பதில் அல்லு அர்ஜுன் சார்தான் சொல்லணும் என்று நெல்சன் சொல்ல, அதைக்கேட்ட அல்லு அர்ஜுனோ, நான் ஓகே என்பது போன்று கட்டை விரலை காண்பித்து அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொன்னார்.