சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தற்போது தமிழில் தக்லைப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும் சமீபகாலமாக படப்பிடிப்பு இல்லை என்றால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, சமீபத்தில் தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானுக்கு சென்று இருப்பதாக அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் திரிஷா. அந்த பதிவில், 'நம்மை மனமுடைய செய்தவரிடத்தில் நெருங்கிய நட்புடன் பழகும் ஒருவருடன் நாம் பழகக் கூடாது' என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் திரிஷா. யாரை இப்படி அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. என்றாலும், ஏதோ சொந்த வாழ்க்கையில் தான் பாதிக்கப்பட்ட விஷயத்தைதான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.