மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி |
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் மஹாராஷ்டிரா மற்றும் மேற்குவங்க கலைகள், சினிமாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரு மாநிலங்களை சேர்ந்த இயக்குனர்கள் தமிழ் படங்களை இயக்கினார்கள். இப்படியான காலகட்டத்தில் மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற கதையான 'சாந்த சக்குபாய்' தமிழில் திரைப்படமாக உருவானது. இந்த கதை அங்கு தெருக்கூத்தாகவும், கதா காலேட்சபமாவும் சொல்லப்பட்டு வந்தது.
இது ஒரு கிருஷ்ண பக்தையின் கதை. சக்குபாய் தீவிர கிருஷ்ணபக்தை. அவருக்கு சரியான மூளை வளர்ச்சி குறைபாடுள்ள முறை மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளுக்கு கொடுமையான அத்தை அமைகிறார். அந்த வீட்டில் உள்ள இன்னொருவன் சக்குபாயை அடைய திட்டமிடுகிறான். இந்த நிலையில் சக்குபாய் இந்த துன்பங்களில் இருந்து விடுபட்டு கிருஷ்ணனிடமே தஞ்சமடைய புனித யாத்திரையை மேற்கொள்கிறார்.
தனது பக்தையை துன்புறுத்துகிறவர்களுக்கு பாடம் புகட்ட கிருஷ்ண பரமாத்மா சக்குபாயின் உருவம் தரித்து அந்த வீட்டுக்கு செல்கிறார். அப்பாவியான சக்குபாய் என நினைத்து மாமியார் கொடுமை செய்ய அதற்கு கிருஷ்ணர் கொடுக்கும் பதிலடிதான் கதை. இதற்கிடையில் யாத்திரை சென்ற சக்குபாய் இறந்து விட கிருஷ்ணருக்கு சிக்கல் ஏற்படுகிறது. சக்குபாய் வேடத்தில் இருந்து அவரால் வெளிவர முடியாது. எனவே கிருஷ்ணரை காப்பாற்ற ருக்மணி வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்த படத்தை சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கினார். சோமயராஜூலுவும், கொத்தமங்கலம் சுப்புவும் திரைக்கதையை எழுதினர், துறையூர் ராஜகோபால சர்மா இசை அமைத்திருந்தார். சக்குபாயாக அஸ்வத்தமாவும், கொடுமைக்கார மாமியாராக பனி பாயும், கணபதி பட் கிருஷ்ணராகவும், ராஜமணி ருக்மணியாகவும், சாரங்கபாணி சக்குபாயின் கணவராகவும் நடித்திருந்தார்கள். படம் பெரிய வெற்றி பெற்றது.