பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று மாரி. இந்த தொடரில் ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஆரம்பத்தில் நடிகை சோனா மாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், திடீரென வெளியேறிவிட்டார்.
அதன்பின் பல பிரபலங்கள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் ஆஷிகா படுகோனும் வெளியேறுவதாக தகவல் கசிந்துள்ளது. ஆஷிகா படுகோனுக்கு சீரியல் குழுவினருடன் எந்தவித பிரச்னையும் இல்லாத போதும் சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் சீரியலை விட்டு விலகுவதாக சக பிரபலங்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து மாரி சீரியலின் அடுத்த கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.