தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று மாரி. இந்த தொடரில் ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஆரம்பத்தில் நடிகை சோனா மாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், திடீரென வெளியேறிவிட்டார்.
அதன்பின் பல பிரபலங்கள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் ஆஷிகா படுகோனும் வெளியேறுவதாக தகவல் கசிந்துள்ளது. ஆஷிகா படுகோனுக்கு சீரியல் குழுவினருடன் எந்தவித பிரச்னையும் இல்லாத போதும் சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் சீரியலை விட்டு விலகுவதாக சக பிரபலங்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து மாரி சீரியலின் அடுத்த கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.