ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டில்லியில் விமான படையில் பணியாற்றிய கணேஷ் அங்கு நாடகங்களிலும் நடித்து வந்தார். அதன்பிறகு சென்னை வந்து டெல்லி கணேஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார். குணசித்ர வேடங்களில் அறிமுகமாகி குணசித்ர கேரடர்களில் மட்டுமே 500 படங்களுக்கு மேல் நடித்தார்.
அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த படம் 'எங்கம்மா மகராணி'. எம்.ஏ.காஜா இயக்கிய இந்த படத்தில் டெல்லி கணேஷ் நாயகனாகவும், சுமித்ரா நாயகியாகவும் நடித்தார்கள். இவர்களுடன் ரூபா, சுருளிராஜன், நளினிகாந்த், ராகினி, ஒய்.விஜயா ஆகியோரும் நடித்தார்கள். வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். சங்கர்-கணேஷ் இசை அமைத்திருந்தனர்.
ஸ்ரீ காயத்ரி என்டர்பிரைசஸ் சார்பில் மாணிக்கம் செட்டியார் தயாரித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற 'மாலையில் பூத்த...' என்ற பாடல் புகழ்பெற்றது. இதனை எழுதிய புலமைப்பித்தனுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடி இருந்தனர். நடுத்தர குடும்பத்திற்குள் நடக்கும் கலாட்டாக்களை வைத்து உருவான படம்.