மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா 2' டிசம்பர் 5ம் தேதியன்று பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கானா மாநிலத்திற்கான கட்டணத் தொகைக்கான அரசாணையை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 4ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணத்தை ரூ.800 என நிர்ணயித்துள்ளார்கள்.
படம் வெளியாகும் தினமான டிசம்பர் 5ம் தேதிக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கும், டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிக்கான இரண்டு கூடுதல் காட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளார்கள்.
சிங்கிள் தியேட்டர்களில் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.150ம், 9ம் தேதி முதல் 16ம் தேதிவரை ரூ.105ம், 17ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை ரூ.20 உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.200ம், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரூ.150ம், 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரூ.50ம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். அவற்றிற்கான ஜிஎஸ்டியும் தனி.
தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில அரசு என்ன அரசாணை வெளியிடப் போகிறது என திரையுலகினர் காத்திருக்கிறார்கள். ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இடையிலான மறைமுகமான மோதல் ஏற்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.